குரல்கள்

கடலிலும் தத்தளிக்கிறார்கள்
கரையிலும் தத்தளிக்கிறார்கள்.

கடலிலும் வெள்ளம்
கரையிலும் வெள்ளம்
தரையிலும் வெள்ளம்.
தவித்த வாய்க்கு
தண்ணீர் கிடைக்கவில்லை
பசித்த வயிறுகள்
பட்டினியில்.

கூக்குரல்களுக்கு
குரல்களில் சமாதானம்
குரல்களில் மட்டுமே.

இயற்கை
ஏமாற்றிவிட்டது.
நீங்களும் ஏமாற்றாதீர்கள்.

எழுதியவர் : Kanavudasan (8-Dec-17, 10:37 pm)
Tanglish : kuralkal
பார்வை : 88

மேலே