அற்புதங்கள் நீடிக்கும்

பேரருள் அற்புதம்

கல்யாண்குமாரும், காதர்பாஷவும் உயிர் பிழைத்த அதிசயம்!!



ச.நாகராஜன்





1

ஆண்டவனின் அற்புதங்களுக்கு எண்ணிக்கை என்பதே இல்லை. கால, தேச, வர்த்தமான, மதம்,ஜாதி, அந்தஸ்து,பால்,இனம்,வயது, தேசம் கடந்த அருள் மழை அவனுடையது!



காயத்ரி மகிமை பற்றிய எனது கட்டுரையில் கல்யாண்குமார் என்ற ஒரு இளைஞர் தேனருவி மலைக்கு சென்றவர் தவறி ஒரு ஆழ்ந்த பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டதையும், அவரைத் தேடச் சென்றவர்கள் நம்பிக்கை இழந்து அந்த முயற்சியைக் கைவிட்டதையும், யதேச்சையாக அந்தப் பக்கம் சென்ற ஒருவர் உதவி கேட்கும் அபயக் குரலைக் கேட்டதையும்,பின்னர் உடனடி முயற்சி மேற்கொண்டு அவரை உயிருடன் மீட்டதையும் குறிப்பிட்டிருக்கிறேன். காயத்ரி மந்திரத்தில் மிகவும் பக்தி உள்ள அந்த இளைஞர் ஆழ் பள்ளத்தாக்கில் காயத்ரி ஜபம் செய்ததையும்,காயத்ரியே தன்னைக் காப்பாற்றினாள் என்று அவர் கூறியதையும் அந்தக் கட்டுரையில் படிக்கலாம்.





அதே போல அதிசயிக்கத் தக்க இன்னொரு அதே மாதிரியான சம்பவத்தைப் படித்தவுடன் வியப்பு தான் மேலோங்கியது.

29-11-2017 டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வந்த செய்தி அது!







2

ககனசுக்கி நீர்வீழ்ச்சிக்குச் சுற்றுலாவாகப் புறப்பட்டார் பெங்களூருவைச் சேர்ந்த காதர் பாஷா.

300 அடி ஆழமுள்ள ஆழ் பள்ளத்தாக்கில் தவறி விழுந்தார் அவர்.

சனிக்கிழமை மதியம் பள்ளத்தில் விழுந்தவருக்கு இடது கால் முறிந்தது, ஒரு கையில் காயம்.ஒரு வழியாக இழுத்தவாறே நடந்தாலும் முடியவில்லை.

ஞாயிறு போனது. திங்கள் மதியமும் வந்தது. யதேச்சையாக அந்தப் பக்கம் வந்த ஒருவரைப் பார்த்த காதர்பாஷா கூவினார். தனது சிவப்புச் சட்டையை வீசிக் காட்டினார்.

அல்லாவின் அருள்! அவர் மீட்கப்பட்டார்.

செய்தியின் முழு விவரம் இதோ;





டைம்ஸ் ஆஃப் பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆங்கில மூலம் இது:

Man trapped in gorge lived on water for 48 hours

TNN | Updated: Nov 29, 2017, 08:20 IST



1





MANDYA: Stuck in a 300 ft gorge with a broken leg and only the roaring Gaganachukki falls for company, Khader Pasha oscillated between hope and despair for 48 hours. His last act to save himself was to wave his red shirt to a tourist who happened to see him. When his rescuers found him, Pasha had fainted from the exertion.


Pasha, from Kadirenahalli in Bengaluru, had come to the falls on Saturday afternoon. Not content with merely watching the falls, he followed three people who were descending a gorge to get to the bottom, police said. He made it past the spray but suddenly, he stepped on a rock and fell. When he landed deep in the water, his left leg was broken and his left arm severely injured.

He dragged himself to a few stones nearby and stretched his legs. He then screamed for help but the roar of the falling water drowned his voice. Soon enough, the sun set and it was dark all around. A chill rose and Pasha, now in agony from the fractured leg, nearly froze. There was nothing to eat but plenty to drink. Pasha drank water and slept in snatches, fearing snakes and other creatures in the undergrowth. By morning, he felt, he might be able to draw the attention of tourists.
But all of Sunday too, he failed. He began to lose hope with every passing hour. On Monday noon, Pasha noticed a tourist looking his way, took off his red shirt and waved to the tourist and screamed for help .
***





3

அதிசயமான இந்தச் சம்பவம் அப்படியே தேனருவி நிகழ்ச்சியை நினைவூட்டுகிறது.



கல்யாண்குமாரை காயத்ரி தேவி காப்பாற்றினாள்.

காதர்பாஷாவை யார் காப்பாற்றியது?

அல்லாவின் அருளே! அவரது புண்ணியம் அவர் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது.

பெரும் சக்தி ஒன்று மதம், ஜாதி,இனம், தேசம் உள்ளிட்ட எல்லாத் தடைகளையும் கடந்து உலகினருக்கு அருள் பாலித்து வருகிறது என்பதற்கு இந்தச் சம்பவமும் ஒரு எடுத்துக் காட்டு!







4

இதைப் பற்றிச் சிந்திக்கும் போது ஹிந்து மதத்தின் அடிநாதமான ஒரே ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது.

ஏகம் ஏவ; அத்விதீயம் ப்ரஹ்ம!

உண்மை ஒன்றே; இரண்டு இல்லை.

ரிஷிகள் அல்லது அறிஞர்கள் அதைப் பலவாறாக அழைக்கின்றனர்.

ஏகம் ஸத்; விப்ரா: பஹுதா வதந்தி!

நாமக்கல் கவிஞர் அழகுறச் சொன்னார், சூரியன் வருவது யாராலே, சந்திரன் திரிவது எவராலே என்ற பாடலில்.

அதில் சில பகுதிகள்:



சூரியன் வருவது யாராலே சந்திரன் திரிவது எவராலே

காரிருள் வானில் மின்மினி போல கண்ணிற் படுவன அவை என்ன



அத்தனையும் தர ஒரு கருத்தன் யாரோ எங்கோ இருப்பது மெய்

அல்லா வென்பார் சில பேர்கள்;

அரன் அரி என்பார் சில பேர்கள்;

வல்லான் அவன் பர மண்டலத்தில்

வாழும் தந்தை யென்பார்கள்

சொல்லால் விளங்கா ‘நிர்வாணம்’

என்றும் சில பேர் சொல்வார்கள்;

எல்லாம் இப்படிப் பல பேசும்

ஏதோ ஒரு பொருள் இருக்கிறதே!

அந்தப் பொருளை நாம் நினைந்தே

அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்!

***

Share this

எழுதியவர் : (14-Dec-17, 4:44 pm)
பார்வை : 99

மேலே