மதம்இங்கே மனிதம்எங்கே

மதவெறியர்களுக்கு மரணவாசம் 
மல்லிகைவாசமோ   
நொடிக்கு நொடி 
பலஉயிர்களை 
கொல்வதால்மதவெறியர்களுக்கு 
தீவிரவாதம் தித்திக்கும் பொங்கலோ 
எங்களை எதிர்ப்பவர்கள்யாராயினும் உயிரோடு எரிப்போமென உறக்கச் சொல்வதால் 
என் உயிரினும் மேலான
என் சகமனிதனே
சற்று சிந்தித்துப்பார்
நம்மண்ணில் 
மதம் மகிழ்ச்சியாய் இருக்கிறது 
சாதி சவ்கரியமாய் இருக்கிறது
பிரிவினை பிடிவாதமாய் இருக்கிறது 
மனிதம் மட்டும் ஏனோ  
இன்றோ நாளையோ  சாவக்கிடக்கிறது !
இதற்க்கெல்லாம் கரணம் 
நமக்குள் இருக்கும் வேற்றுமை 
இதையெல்லாம் மாற்றும்
ஆயுதம் 
நமக்குள் வரவேண்டிய ஒற்றுமை 

எழுதியவர் : சூரியன்வேதா (15-Dec-17, 11:37 pm)
பார்வை : 83

மேலே