உன் பெயரின் முதல் எழுத்து

எழுத தெரியாத குழந்தையாய்
கிறுக்கி கொண்டியிருந்தேன்
நான்
என் கிறுக்கலுக்குள்
கவிதையாய் படித்துக்கிடந்தாய்
நீ
எழுத தெரியவில்லை என்று
என் கைபிடித்து “அ” என எழுதினாள்
என் தாய்
பரிபூரண சந்தோசம்
என் மொழியின் முதல் எழுத்து
எழுதியதற்கு அல்ல
உன் பெயரின் முதலயெழுத்தை
எழுதியதற்கு