எண்ணமும் ஒளிர்கிறது

---------------------------------------

​தூரிகையோ ஒன்று
காரிகையர் மூன்று
நீர்க்குடம் ஒன்று
சுமப்பவர் மூன்று !​

ஓவியத்தில் கற்பனை
ஓவியனின் சாதனை
அஃறிணை ஒருமை
உயர்திணை பன்மை !

கலையுணர்வும் புரிகிறது
கைத்திறனும் தெரிகிறது
எண்ணமும் ஒளிர்கிறது
வண்ணமும் மிளிர்கிறது !

வாழ்த்துகள் ஓவியருக்கு !

பழனி குமா

எழுதியவர் : பழனி குமார் (16-Dec-17, 10:04 pm)
Tanglish : ennamum olirgirathu
பார்வை : 1547

மேலே