கம்பன் வரைந்த காதல் மடல்

உன் விழியதைக் காணும்
வழிதனைத் தேடி தவிக்கின்றேன்
நீ மொழிந்திடும் தமிழின்
இனிமையைக் கேட்கத் துடிக்கிறேன்
உன் சிரிப்பொலி சிதறும்
மணித்துளி அதனில் தொலைகின்றேன்
நீ நடந்து சென்ற
சுவடுகள் காணவே அலைகின்றேன்
பகலில் ஒளிரும் பகலவன்
கண்டிட மறக்கின்றேன்
உன்னைக் காணா ஒரு
நொடிதனிலும் இறக்கின்றேன்
இரவில் மிளிரும் நிலவின்
ஒளியில் நனைகின்றேன்
எனினும் உந்தன் நினைவில்
தானடி தொலைகின்றேன்

எழுதியவர் : தினேஷ்குமார் . இ (17-Dec-17, 7:55 pm)
பார்வை : 142

மேலே