மழலைகளின் கைவண்ணம்
வானம் பச்சையானது
மேகம் மஞ்சளானது
சூரியன் கறுப்பானது
பூமி ஆரஞ்சானது
மரங்கள் வெள்ளையானது
மலைகள் நீலமானது
கடல்கள் சிவப்பானது
இவைகள் எல்லாமே
மழலைகளின் கைவண்ணத்தில் நவீனசித்திரமானது அவற்றை கண்டு ரசித்த மனங்களிலோ
இச்சித்திரம்
மிகபத்திரமானது !