அந்த பறவைகள்
நடு நிசி வேளை, மயான நிசப்தம்,
பனிமலை மடியில் ஒரு இலையிலா மரம்
அதன்'பொந்திலிருந்து கிளம்பி போனது
ஒரு பருந்து ; பனிமலைச்சமவெளியில்
பெரும் சப்தம், அதை கண்டு ரசித்தது போல்
ஆந்தை ஒன்று அந்த மரத்தில் , இருளில்
அனல்போல் மின்னியது அதன் கண்கள்