ரசிகன்

வலியென்று தெரிந்த பின்பும்
சில வரிகளின் மீது
மோகம் கொண்டவன்,

கவிதைகளின் காதலன்
பாடல்களின் மேல்
பைத்தியக்காரன்,

இசையின் மேல்
இன்னமும் புரியாத
மயக்கம் கொண்டவன்,

கதைகளின் மேல்
கவர்ச்சி கொண்டவன்,

சிறுகதையின் மேல்
சிற்றின்பம் கொண்டவன -- என
முப்பொழுதுகளிலும் இதன்
நினைவில் வாழும்
நானும் ரசிகன் தானே...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (25-Dec-17, 6:42 pm)
Tanglish : rasigan
பார்வை : 151

மேலே