சட்டம் யார் கையில்

நீதிதேவதையே! உன் சட்டங்கள்
அறத்தின் கரத்தில் இருந்து
அதிகாரத்தின் கரங்களுக்கு சென்றதேனோ?
தவறிழைக்கும் கையவர்களை தண்டிக்க
உன் சட்டங்கள் மறுப்பதேனோ?
எனது உண்மைகள் தோற்பதேனோ?
இந்த ஊமைச்சட்டங்கள் இருப்பதேனோ?
நடுநிலை மாறிய உன்
"சட்டம் யார் கையில்"
என, நான் தேடுவதேனோ ?

எழுதியவர் : விக்னேஷ் நதியா (27-Dec-17, 8:18 pm)
பார்வை : 595

மேலே