சுகமேலோ ரெம்பாவாய்
கல்லுங் கனிந்துருக கண்ணனவன் கைகளில்
புல்லாங் குழலெடுத்துப் பூபாளம் வாசிக்க
மெல்லிசையில் ஆநிரை மெய்மறந்து நின்றிருக்கும்;
புல்லுந் தலையசைக்கும்; புன்னைமரம் பூச்சொரியும்;
எல்லையிலா வன்பில் யசோதை இளங்கன்றின்
முல்லைச் சிரிப்பில் முழுதா யுளங்கரையும்;
நில்லா மனத்தை நிறுத்திவழி காட்டுவானைச்
சொல்லெடுத்துப் பாட சுகமேலோ ரெம்பாவாய் ! 7.

