பெற்றெலோ ரெம்பாவாய்

வண்ணமயிற் பீலி வடிவாய் யணிந்தசிறு
கொண்டையும், கையில் குழலும், சலங்கையுடன்
தண்டையும், மார்பினில் சந்தன மும்பூசி
வெண்பட் டுடுத்திய வேணுகோ பாலனைக்
கண்ணாரக் காண்பதற்குக் காலையிள ஞாயிறும்
வெண்ணொளி பாய்ச்சி,வான் மேகங் களிடையெழும் ;
கண்ணுறக்கம் போதும்; கடுகிவந்து கைத்தொழ
பெண்ணே! பெரும்பேறு பெற்றேலோ ரெம்பாவாய் ! 6.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Jan-18, 10:17 pm)
பார்வை : 49

மேலே