எழுதத் தூண்டியவள்

எழுதிடத் தூண்டியவளே - உன்னைத்
தழுவிடவும் தூண்டமாட்டாயோ?
துக்கத்தைவிட
துயரமானது - உன்னைத்
தொடாமல் இருப்பதே.
தண்ணீரைத் தொடாத மீனுண்டோ?
தாமரையைத் தழுவாத நீருண்டோ? -நான் மட்டும்
உன்னைத் தழுவாமல் வாழ்வதுண்டோ?
என்னைத் தாண்டி உன் நினைவுகள்
எல்லைக் கடந்துப் போகாததால் - தனிமையின்
தொல்லையில் தவிக்கின்றேனடி.

எழுதியவர் : சங்கு chandramoulee (6-Jan-18, 8:39 pm)
பார்வை : 236

மேலே