வெள்ளைக் கருவாச்சி

மண் காலில் ஒட்டாம நடந்து ,
அந்த சின்ன வீட்டோட ராணியா வாழ்ந்து
இங்க மண் வீட்டுக்கு வாக்கப்பட்டு
வெள்ளை தோல்கொண்ட வைரமுத்து கருவாச்சியானயோ ??

வந்து ரெண்டு புள்ளையும் பெத்தெடுத்து
அதுல ஒன்ன ஹாஸ்டெலுக்கு விடும்போது
வெளியே கண் காசியாம தைரியமா நின்னு
உள்ள ரத்தம் கசிஞ்சி போனது தெரியாதுன்னு நெனச்சாயோ ??

ஒண்ணுமே தெரியாம சிறுவயசில் பேந்த விழிச்சாலும்
எப்படியெல்லாம் நடக்கணும்னு சொல்லிக்கொடுத்து
ஈரைந்து மாதங்கள் சுமந்த வலியை விட
இந்த ஈரைந்து வருஷமா என்ன
நெஞ்சுக்குள்ள சுமந்த வலி புரியாதுன்னு நெனச்சாயோ ???

உ உடம்பில் நகைகள பாத்ததில்ல
எங்களையே சொத்தா நெனச்சு
கோயில்களெல்லாம் சுற்றும் போதும்
எனக்கென்ன ஆனாலும் பரவாயில்ல
அதுகள நல்ல வையின்னு வேண்டுறதை அறிவேனே !!!

அம்மா ... உண்மையில உன்ன சொல்ல தகுதியில்ல
என்னைக்கும் உனக்கு பிள்ளையாய் இருக்க ஆசையில்ல
அடுத்த பிறவியில் உனக்கு தாயாய்
மாறும் வரம் ஒன்று கொடுப்பாயோ????

எழுதியவர் : சேவகி (9-Jan-18, 9:14 pm)
சேர்த்தது : Sevagi
பார்வை : 434

மேலே