நீயும் நானும்

முடி கோதிடும் விரல்கள்
மடி சாய்ந்திடும் தலை
கணவன் என்ற
போர்வைக்குள் நான்
மனைவி என்ற
தலையணை நீ!
தென்றல் வீசிடும்
நம் காதல்...
ஊசல் கடிகாரம் போல்
ஊசலாடுகிறது மனம்
வலக்கை, இடக்கை விதியும்
விதிவிலக்கானது
இரு கைகள் பின்னியதும்..
சில நேரம்
போரிட நான்
வாதத்திற்கு நீ
வாய்தா ஏற்றது வாதம்
வசந்தம் வந்தது
வாசலில் - இணைந்து
வருடுவோம்...
வருடம் ஓடினாலும்
வயதுகள் ஓடினாலும்
வழித்துணையாக நான்
மாறாது நம் காதல்....
- மூ.முத்துச்செல்வி