ஆறு

காவியங்கள் புகழ்ந்தன...
கவிஞர்கள் புகழ்ந்தார்கள்..
மேவிய ஆறுகள் பல ஓட
மேனி செழிந்த நாடு என்று
புகழப்பட்டடும் இந்த மண் தான்..
இன்றோ உயிர் தொலைக்கும் நிலையில்
மூச்சுமுட்ட நிற்கிறது....
பேராசைகள் மனிதனை ஆண்டு
அவன் கைகள் மண்ணை சுரண்ட
கிழவியின் வற்றிப்போன தனங்களாய்
ஊற்றுகளின்றி நீரற்ற பாலைவனமாய்..
இயற்கையின் கண்ணீர் வரிகள் தான்
சில நேரங்களில் ஊசலாடும் உயிரை காக்கிறது..
வரிவரியாய் எம்மண்ணின் மேனியெங்கும்
ஓடும் இந்த ஆறுகள் எங்களின்
வறுமைக்கு விடுதலை தரவில்லை..
கொள்ளிக்கண்களோ எங்கே எப்படி மடக்கி
கொள்ளையிடலாம் என்று கணக்கு போடுகிறது..
நாகரிகத்தொட்டில்கள் இன்றைக்கு
அள்ளித்தாலாட்ட ஆளின்றி தவிக்கிறது..
நாடி நரம்புகளாய் என்றும் சுற்றி ஓடினாலும்
மண்ணின் மைந்தர்களை முறுக்கேற்ற முடியவில்லை..
கைவைத்தால் ஊரும் நீர் என்ற நிலைமாறி
எலும்புக்குவியலின் கொல்லைமேடாகி
மெல்ல தன் கற்பை காவு கொடுக்கிறது..
வாயிருந்தும் ஊமையாய் மனிதர்கள் வாழும் நாட்டில்
கற்பே களவு போகையில்
வேலியில்லா இந்த உயிர்த்தடங்கள் எம்மாத்திரம்..
ஒரு தலைமுறையாய் உயிருக்கு போராடுகிறது
இந்த நரம்புகளின் உயிரை காப்பது யார்.....?

#சங்கர்_நீதிமாணிக்கம்

எழுதியவர் : சங்கர் நீதிமாணிக்கம் (12-Jan-18, 11:15 pm)
சேர்த்தது : நீ சங்கர்
Tanglish : aaru
பார்வை : 1503

மேலே