அருள் வேண்டி

#அருள்_வேண்டி...

மந்திரமும், எந்திரமும் அர்த்தமற்றதாய்,
தந்திரமே அழித்திடுமாம்,
நரித்தந்திரமே அழித்திடுமாம் நயவஞசகர் நெஞ்சகத்தே...

ஊழ்வினை, ஊழ்வினை என்று உருட்டிப் புரட்டிக் கொள்வாரே தன் செய்வினையறியாது...

பணிவும், துணிவும் பகுத்தறிய வேண்டும் எங்கே பணிவும், எங்கே துணிவும் அவசியமென்றறிவதற்கு...

உருவத்தில் சிறுவனாய் நான் தோற்றமளிப்பதில் ஏதுவுமில்லை குற்றம்...
உருவங்கண்டு இகழும் உன் மூளையின் சிறுமைச் செயலில் உள்ளது குற்றம்...

அன்போடு வந்தாலும், வம்பிழுக்கும் நோக்கில் வந்தாலும் அளவில்லா அன்பினை வழங்கிட அருப்பெருஞ்சோதியே,
தனிப்பெருங்கருணையே எமக்கருள்வாய்...

ஓம் நமச்சிவாய...
திருச்சிற்றம்பலம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Jan-18, 11:51 pm)
பார்வை : 481

மேலே