மண் வீடு மனக்கோட்டை

இது ஒரு படக்கவிதை::
====================
மண் வீடு..! மனக்கோட்டை..!
==========================
மண்ணில் உழலுகின்ற பல்லுயிரிலே...மனிதர்களுக்குள்..
.
..........மனதிலாசை பேராசை இல்லாதவர் உண்டோசொல்.?
.
மண்ணில் பிறந்தவரெலாம் பாவச்செயல் செய்தாலும்..
.
..........மேலுலகுநரகுக்குச் செல்லாரெனச் சொல்ல முடியுமா.?
.
மண்ணில் பிறந்தமனித வுயிரொன்று இந்நிமிடம்வரை..
.
..........மனதாலும் பாவம்செய்விலார் யாரெனக் கூறுவாயா.?
.
அண்டக் கோள்கள் தங்களுக்குள் சண்டையிட்டால்..
.
..........உண்டிதான் கிடைக்குமா.? உலகம்தான் செழிக்குமா.?
.
.
.
.
மண்ணுலகை ஆட்சிசெய்த மன்னனின் மனதிலெழும்..
.
..........நல்லெண்ணம் எல்லாவற்றும் வெல்வதில்லையே ஏன்.?
.
மண்ணுலகு வாழ்வே நிரந்தரமென நிலையாய்நம்பும்..
.
..........மாந்தர்களும் இவ்வுலகில் இல்லாமல் இல்லையேஏன்.?
.
பண்டுநாம் உணர்ந்தபல அனுபவங்களே நம்வாழ்வில்..
.
..........பயன்கொடுக்கும்!எண்ணிநாம் செயல்படும் தருணமிது.!
.
மண்ணிலே மணல்வீடு கட்டியழிக்கும் செய்கைபோல..
.
..........மனக்கோட்டை கட்டிநிறைவிலா வாழ்ந்திடல் தகுமோ.?
=======================================================
வல்லமை படக்கவிதை போட்டிக்குச் சமர்ப்பிக்கப்பட்டது
நன்றி படம்:: கூகிள் இமேஜ்