வாழ்வில் சிறந்தது நட்பு
தோழனே!
அன்பு எனும் ஊற்றில்
என்னுடன் குளித்தவனே!
அறிவை எனக்கு
பகிர்ந்தளித்து உயிரில்
என்னுடன் கலந்தவன்
நீ!
என் உருவை உன்
கண் விழியில் அடக்கியவன்
நீ!
என் ரத்த துணுக்களுள்
ஒன்றி சிரிப்பவன்
நீ!
விடியலாய் உறக்கம்
தெளிந்து உருவாய்
என் முன் தோன்றுபவன்
நீ!
தமிழ் சுவை
என்னுடன் பகிர்ந்து கொள்பவன்
நீ!
உடலிலும் உயிரிலும்
நம் பாரதநாட்டை
தாங்கி நிற்பவன்
நீ!
அன்பு என்னும் கோவிலில்
நட்பு தெய்வமாய்
என்னுள் இருப்பவன்
நீ!
இருபது வருடம்
என்னுடன் இன்பம்
துன்பம் பகிர்தவன்
நீ!
சோகத்தை பகிர்ந்து
வாழ்வை சொர்கமாக்கினாய்
நீ!
வேகத்தை தடுத்து
வாழ்வை நல்வழி காட்டினாய்
நீ!
கடிகாரமாய் ஓடும் வாழ்வில்
பெருமுள்ளாய் வந்தாய் நீ!
என்றும் உன்னை மறவேன்!