அவள்அவன்ஆழி
அவள்..அவன்..ஆழி!
தொடுவானம்..
தீராத நீலம்!
காலம் முழுக்க கரைந்தாலும்
நரைத்த அலைகள் ஓய்வதில்லை!
தேய்ந்து நிற்கும் முழு மதி..
அவள் அருகில் நான்!!
வருடிய தென்றலின் மிச்சம்
வைத்தார் போல்
அவள் மொழி..
மீண்டும் மீண்டும்
அவள் பாதங்களை உரச
முந்தியடித்து வரும்
ஆசை அலைகள்..
ஈர மணலின்
நீளம் எங்கும்
அவள் சுவடுகளை சுமக்க
ஆவளாய் காத்திருக்க..
இதில் ஏனோ..
நானும்
தொலைந்து போனேன்!