தேனுகா எழுத்தாளர்--கலை, இலக்கிய விமரிசகர்

தேனுகா என்றழைக்கப்படும் மு. சீனிவாசன் (இறப்பு: அக்டோபர் 24, 2014)[1] தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் கலை விமர்சகர் ஆவார். கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் இசை, ஓவியம், சிற்பம், வரலாறு என்ற பல துறைகளில் பரிணமித்தவர். இந்திய அரசு வங்கியில் (State Bank of India) பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு

]தமிழ்நாடு, சுவாமிமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சீனிவாசன் நாதசுவரக் கலைக்குடும்பத்தில் பிறந்தவர். தந்தை சுவாமிமலை முருகையன் கோவிலில் நாதசுவரம் வாசிப்பவர். தந்தை வாசிக்கும் போது சீனிவாசன் தாளம் போடுவார்.[2]

சிறப்புகள்[தொகு]

நெதர்லாந்து கட்டிடக்கலைஞர் ரீட்வெல்ட் வடித்த சிவப்பு-நீல வண்ண நாற்காலியைப் போன்று இவரே வடிவமைத்தார்.
தமிழில் நுண்கலைகள் பற்றி அழகியல் கண்ணோட்டத்துடன் விமரிசனம் வைத்த முன்னோடி.[3]

நூல்கள்[தொகு]

வித்யாஷங்கர் ஸ்தபதியின் சிற்ப மொழி (1987)
மைக்கேலேஞ்சலோ (1991)
லியனார்டோ டாவின்சி (1991)
புது சிற்பவியல் : பியாத் மாந்திரியானின் நியோபிளாஸ்டிசிஸம், ஓவியர் வான்கோ (1996)
பழகத் தெரியவேணும் (1997) [4]
பியாத் மாந்திரியான் (2007)
தோற்றம் பின்னுள்ள உண்மைகள் தேனுகாவின் கலை இலக்கியப் படைப்புகள் [5]

கட்டுரைகள்[தொகு]

டாக்சிடெர்மிஸ்டுகள் தேவை” (1984)
வண்ணங்கள் வடிவங்கள் (1987 வெளியான கட்டுரைத் தொகுப்பு தமிழ்நாடு அரசின் சிறந்த கவின்கலை விருதுபெற்றது )[3]


விருதுகள்[தொகு]

மாநில லலித கலா அகாதெமியின் கலைச்செம்மல் விருது
இந்திய அரசின் ஷபெல்லோஷிப் விருது
சிறந்த தமிழறிஞருக்கான தமிழக அரசு விருது
ஸ்டேட் வங்கி இலக்கிய விருது

மேற்கோள்கள்[தொகு]
1.↑ "கலை இலக்கிய விமர்சகர் தேனுகா காலமானார்". தினமணி (25 அக்டோபர் 2014). பார்த்த நாள் 25 அக்டோபர் 2014.
2.↑ "புகழைத் தேடி அலையும் கலைஞர்களுக்கு படைப்புத் திறன் நின்றுவிடும்(Creative menopausity)! - தேனுகா நேர்காணல்". பார்த்த நாள் 25 அக்டோபர் 2014.
3.↑ 3.0 3.1 "அஞ்சலி: தேனுகா". புத்தகம் பேசுது. பார்த்த நாள் 26 சனவரி 2015.

எழுதியவர் : (27-Jan-18, 4:47 pm)
பார்வை : 71

மேலே