காத்திருக்கிறேன்🌷
எத்தனையோ உயரமான மரங்களில்
சறுக்காமல் சலிக்காமல் ஏறி இறங்கி
விடுகிறேன்🌴🌴🌴🌴
உன் மனதில் குடியேற முடியாமல்
தினம் சறுக்கி விழுகிறேன் 💖
பல நூறடி உயர மலையேற சுணங்கவில்லை💛
நான் சூட வந்த மலர் உன் கூந்தலேற
நீ இணங்கவில்லை💚
சூறாவளி காற்றில் சுறுசுறுப்பாஎதிர் நடை போடுவேன் 💫
கூரான உன் நாசி விடும் மூச்சுக் காற்றில் பஞ்சாய் பறந்து போகிறேன்💟
வேலேந்தி வேட்டைக்கு போக அஞ்சாதவன்🐆🐆
வேலாய் குத்தும் உன் விழிப் பார்வையால் இரவிலும் துஞ்சாதவன் ஆகினேன்❣👀
உன் மனம் எனக்காய் மாறுமா?
என்றைக்கு அக் கணம் நேருமோ? 👨❤💋👨காத்திருக்கிறேன்👩❤💋👩