மழையும் அவளும்

அவள் சிங்காரித்து அலங்கரித்த
சிகைக்குள்
சிக்கி கொண்ட மழைத்துளி
சிதறி விழ மனமின்றி
சிலிர்ப்பில் சில நொடிகள்
மயக்கம் கொண்டதோ

*******
மழை வருகையில்
அவளுக்கு நான்
குடை பிடித்தால்
மழை என்னை
வசைக்கிறது
ஏன் நான்
தீர்த்தமாவதை
தடுக்கிறாய் என்று

*****

மழை காற்றில்
குடை கொண்டு
முகம் மறைக்கிறாள்..
இருந்தும் தேங்கிய நீரில்
அவள் முகத்தை
நான் தேடி பார்க்க
கலங்கிய நீரிலும்
தேவதை போலவே
அவள் தெரிகிறாள்

*******

வீட்டின் ஜன்னல் வழியே
அவள் கைகள் மட்டும்
பேசிக்கொள்கிறது
மழையோடு
வீதியை நனைக்கும் மிச்சமழையோ
வாய்ப்பின்றி
செத்து மடிகிறது
மண்ணோடு

****
ஒரு குடை கொண்டு
நடந்தோம்
மழையின் ஈரத்தில்
அந்த நினைவுகள்
காயவில்லை
மனதின் ஓரத்தில்
கருமேகத்தோடு
கண்களும் சிந்துகிறது
தனிமையின் சோகத்தில்

*****

எழுதியவர் : MURALIDHARAN (16-Feb-18, 10:22 am)
Tanglish : mazhaiyum avalum
பார்வை : 119

மேலே