நீ,நான்,நாம்,

விழி மூடா என் இரவுகள்.,
தூங்காத உன் நினைவுகள்.
விரல்கள் தீண்டாத
வண்ணக்கோலங்கள்.!
உன் விழி தீண்ட
என்னுள் விளைந்தவை.!
நிழலும் தொடாஉறவு.,
நிகழ்கால வரவு.!
வண்ணங்கள் வாரியிறைத்உன் நினைவுகள்.!
இனி பேசமுடியாது
எனும் போது ஆழ்கடல்
அமைதியாய் உன்னுள்
மற்றும் என்னுள்
படரும் மௌனம்.!
உன் மௌனம் ஓராயிரம்
மொழியிலும் காதல் சொல்லியது.!
என் மனம் கலைத்தது.
என்னுள் மட்டுமா இது.,
உன்னுள்ளும் தான்.!
நம்முள்.! நீ மறைக்க
முயல்கிறாய்.!நான்
மறுக்க
மறுக்கிறேன்.!

எழுதியவர் : sana (22-Feb-18, 1:49 pm)
பார்வை : 251

மேலே