காதல்

என் முதல் பார்வைக்கு
உந்தன் விழிகளின்
இமைகள் மூடி திறந்து
மூடி திறந்து விடை அளிக்க
உந்தன் உதட்டினில்
ஒரு மௌனமொழி
சம்மதம் என சொல்கிறதாய்
நான் நினைத்தேன்
உன் பேசும் மொழிக்கு
காத்திருந்தும் ,நீயோ ஏனோ
மௌனமாய் இருக்கின்றாய்
என்னை விரும்புகிறாயா
இல்லையா என்று ஒன்றும்
சொல்லாது என்னை
வதைக்கின்றாயே பெண்ணே
நீ பெரும் அழகிதான்
ஆனால் கருணை இல்லா
பெண்ணாகிவிடாதே ............
அன்பும் கருணையும்
பெண்ணின் பிறப்போடு
வரும் குணங்கள் இதை
அறியாதவளா நீ .........
இன்னும் என் மனதை
அலையவிடாதே பெண்ணே
உன் மனதை திறந்துவிட்டு
அதில் எனக்கோர் இடம்
உண்டா இல்லையா என்பதை
சொல்லிவிடு ...........சொல்லி
என்னை வாழவிடு
உண்டு என்றால் என்னருகில்
வந்துவிடு காதலரான நாம் கூடிடலாம்
இல்லை என்றால் என் வழியில்
நான் போய்விடுவேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Feb-18, 4:01 pm)
Tanglish : kaadhal
பார்வை : 106

மேலே