தொலைவில் இருந்தே ரசித்தேன் ................

மலை சாரல் போல
அழகாய் சிரிப்பாய்.....
தொலைவில் இருந்தே
அதில் நான் நனைவேன்..
நீ பேசும் அழகை பார்க்கும் போது...
நான் என் பேச்சை மறந்து நிற்பேன்...
நீ செல்லும் வழியெல்லாம்
நானும் சத்தமின்றி பின்தொடர்ந்தேன்..
உன்னை யாருக்கும் பிடிக்காது என்று,
ஒருநாள் என்னிடமே அழுதாய்..
இறப்பென்றால் என்னவென்று அன்று தான்
நான் அறிந்தேன்.....
உலகில் உண்மையான உறவென்று யாருமில்லை என்றாய்,
எனக்கு நீ மட்டுமே உலகமாய் இருப்பது அறியாமல்.......
இதை எல்லாம் தாங்கி தான் ஆக தான் வேண்டும்,
நான் உன் தோழன் ஆன
காரணத்தால்..............

எழுதியவர் : நிஷாந்தினி.கே (5-Aug-11, 7:49 pm)
பார்வை : 560

மேலே