அழுகை மொழி

அன்னையே - எந்தன்
முதல் அழுகையை
உனக்காவே, சமர்ப்பிக்கிறேன்...!
பத்துமாதம் பெரும் சுமையாய்,
உன்னுள் தோன்றி...!
வலியை மட்டும் கொடுத்து,
வாழ்ந்து வந்ததால் - என்னை
பிரசவிக்கும் நேரத்தில்,
தோன்றும் வேதனை உணர்ந்து...
உனக்கு ஆறுதல் சொல்கிறேன்....!!
எந்தன் முதல் அழுகை மொழியால்...!!