மக்கள் நீதி மய்யம்

விதை முளைக்க வேண்டுமென்று
விரும்புகின்றேன், பிறருடன்,
விதைமுளைக்கும் என்றே நான்
நம்புகின்றேன் நட்புடன்
கதைபேசும் பேர்வழிகள்
பேசிக்கொண்டு திரியட்டும்
கடைகெட்ட பேர்வழிகள்
திருந்தி வீடுசெல்லட்டும்.

மக்கள் நீதி மய்யம், நாளை
மக்கள் நீதி மன்றம் , தான்.
மக்கள்பணம் கொள்ளை கொண்டோர்,
மரணபயம் கொள்கிறார்.
சிக்கல்வந்து சேர்ந்ததென்று
சீரிசீறிப் பாய்கிறார்
சின்னமனிதன் தலைவனாகத்
திரிந்தகாலம் முடியுது.

கேள்விமேலே கேள்வியாக
கேட்டுக் கேட்டுக் குடைகிறார்
கிடைத்ததெல்லாம் சுருட்டியவர்
கீழும் மேலும் பாய்கிறார்
தோல்விபயம் வந்ததனால்
துவண்டுபோன பேச்சிது.
துரோகிகளின் தப்பாட்டம்
தொலையும்காலம் வந்தது.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (25-Feb-18, 12:27 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 351

மேலே