எங்கே மனிதம்

உன் இனவெறிக்கு
பழி நாங்கள்
உன் போட்டிக்கு
எங்கள் உயிர் பந்தயங்களா?
பள்ளி சுமை சுமந்த
முதுகுகள்
வெடிகுண்டுகளின்
துளைகளை சுமக்கிறதே!

இறைவா!
குழந்தைகளைக் கொல்லும்
இம்மனிதர்களை
உன்னுடன் எடுத்துக்கொள்
எங்கள் கண்ணீரை
துடைக்க கரம் நீட்டு!

வளங்களை அடைய
வளரும் தலைமுறை
வாழ்வை சிதைப்பது
சரியோ!

மிருகங்கள் இரக்கம்கூட
இல்லா மனிதனிடம்
மனிதத்தை தேடுவது
பிழையோ!

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (28-Feb-18, 7:04 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : engae manitham
பார்வை : 515

மேலே