நான்

குடத்துள்
இட்டு

மறைத்த

கூம்பிய
உன்னை

தாங்கும்
குடமாக

நான்

மகிழ்ச்சி
பூரிப்பில்

நீ பூத்து
சிரிக்கையில்

விழுந்து
விடாதிருக்க

என்னை
கிழித்து

உன்னைத்
தாங்கிய

நான்

எனக்குள்
நீ

இருந்தும்

என்ன
சோகம்

உன்னை
தாக்கியது

என்று
அறியாது

நீ உதிர

செய்வது
புரியாது

திகைத்து
நின்ற

நீ இல்லாத

நான்..,
நா.சே..,

எழுதியவர் : Sekar N (7-Mar-18, 7:10 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : naan
பார்வை : 112

மேலே