பாவையை வாழ்த்திடுவோம்

வெற்றிடமாய் இருந்தேனே
வெகுமதியாய் வந்தாயே .....

நிலவொளியாய் வந்தாயே
நிழல்காண நின்றேனே .....

அம்பாக நான் நின்றேனே
வில்லாக வளைந்தாயே .....

உணவிலாப் பொழுதிலும்
உள்ள(த்)தை தந்தாயே ......

உணர்ச்சிகள் பலவற்றிற்கு
உன்னதம் தந்தாயே .....

இவை அனைத்தும் வழங்கிய உமக்கு இந்நாளில் நான் என்ன தருவேனே ..... வாழ்த்துக்கள் மட்டுமே

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : கிஷோர் குமார் (8-Mar-18, 3:38 pm)
சேர்த்தது : kishorekumarV
பார்வை : 71

மேலே