எனதுறவே

எனதுறவே உனக்காக என்றும் இருப்பவள் நானே
என்னுள் கலந்தவனே உனக்காக வாழும் ஓர் உயிர் நான் தானே
விண்ணையே அளந்தாலும் கடலையும் வற்றச் செய்தாலும்
இந்த உலகமே பிளந்தாலும்
உன்னை நினைத்து வாழ்வேனே
பிரிவெனும் சொல்லை நம் அகராதியில் இருந்து அகற்றுவோமே
என் அணுக்களில் கூட உன் பெயரை எழுதிவிட்டேன்
உன் தசைகளில் உனது நினைவுகளை படிய வைத்துவிட்டேன்
ஏன் இப்படி நடக்கின்றது புரியவில்லை ?
இது நான் உன் மேல் வைத்த பிரியமோ தெரியவில்லை
என்னை அறியாமல் என்னுள் வந்தாய்
உன்னை காணக் கூடாது என்றிருப்பேன்
இன்று உன்னை எப்போது காண்பேன் என்றிருக்க
உன்னை புரியாமலும் பிரியாமலும் தவிக்கிறேன்
மீண்டும் மீண்டும் என்னை உன் நினைவில் தொலைக்க செய்கிறாய்
எனதுறவே எப்பொழுது உன்னை காண்பேனோ

எழுதியவர் : (13-Mar-18, 12:33 pm)
சேர்த்தது : அரும்பிசை
பார்வை : 147

மேலே