மௌனமே பேசி விடு

நீ
பேசிவிட்ட
வார்த்தைகளை விட

நீ பேசாத
மௌனங்களில்
தானடா
வலிகள் அதிகம்..

என்
செவி இரண்டும்
கேட்குதடா
உன்
மௌனம்
களைந்து
பேசி விடு என்றே ..

வலிக்கும்
என தெரிந்தும்
மௌனத்தையே
பரிசளித்து
செல்வதும்
ஏனோ

வலியோடு
போராடும்
என் மனதிற்கு

உன்
வார்த்தைகளை
எப்பொழுது
பரிசளிக்க
போகிறாய் ..

எழுதியவர் : ரோஜா (18-Mar-18, 3:35 pm)
Tanglish : mowname pesi vidu
பார்வை : 486

மேலே