காதலில் அவசரம் எதற்கு

படிக்க படிக்க தான்
கவிதையின் வரிகள்
புரியும் - பாட பாட தான்
ராகம் மிளிரும்
மலர்ந்தால்தான் பூவின்
பொலிவும் வாசனையும்
பழக பழகத்தான்
உறவின் தன்மைப்புரியும்
காதலின் உண்மைப்புரியும்
பெண்ணின் தன்மைத்தெரியும்
ஆணின் உண்மைப்பண்பும் புரியும்
பெண்ணே வெறும் கைப்பேசி
வழி வரும் உறவில் மயக்கம் கொள்ளாதே
உனக்கு வாழ்வில் வழி காட்ட
துருவம் உன் தாய் தந்தையர்
மோகம் உன்னை மயக்கும் போது
இதைக்கொஞ்சம் நினைவில் வைத்துக்கொள்
சீரான வாழ்க்கைக்கு நேரான உறவு வேண்டும்
முதலுறவில் வழுக்கிவிட்டால்
அது தரும் வலிகள் ஆறாப்புண்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Mar-18, 8:41 am)
பார்வை : 65

மேலே