உலக கவிதை தினம்

காலம் காலமாய்
அணிவகுப்பு

காதல் சொல்வது
இதன் சிறப்பு

கற்பனையின்
உச்சம்

காட்டாற்று
வெள்ளம்

பொய்கள்
பொய்கைகளாய்

புலம்பல்களின்
பதிவேடாய்

உணர்ச்சிகளின்
கூப்பாடாய்

புணர்ச்சிகளின்
வெளிப்பாடாய்

மனப்பிறழ்ச்சியின்
சொச்சம்

மருங்கி நின்றதே
மிச்சம்

வரலாறு சொன்னது
கனிவோடு

அன்று வள்ளல்கள்
தந்த திருவோடு

வழக்கில் உள்ளதே
செருக்கோடு

நீயும் அதை
கொண்டாடு

இன்று
உலக கவிதை தினம்.
நா.சே..,

எழுதியவர் : Sekar N (21-Mar-18, 8:30 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 298

மேலே