கரைந்ததோடும் கல்லூரி நாட்கள்

காற்றில் கால்கள் மிதக்கும்
இக்கல்லூரி பருவத்தில் ...
வெயிலில் ஒளிரும் புன்னகையுடன்
மழைத் தூவும் கண்ணீருடன் ;
வானவில் ஆகிறது என் இளமை!

வாழ்க்கை எனக்கு அனுபவம் தந்தது ...
அனுபவமெல்லாம் நினைவுகளானது !
உறக்கம் எனக்கு கதைகள் சொன்னது ...
கதைகளெல்லாம் கனவுகளானது !
கனவின் மேல் காதல் கொண்டு...
மனம் எழ மறுக்கும் நேரத்தில்!..
ரீங்காரமாய் ஒலித்தது காலை அலாரம் ,
கனவை பிரிய மனமின்றி..
கவிதையை முடிக்க நேரமின்றி..
ஈருருளியின் சக்கரமாய் ஓடுகிறேன் நான்...
கல்லூரி பேருந்தின் ஜன்னல் ஓரத்திற்காக..!

எழுதியவர் : (22-Mar-18, 7:07 pm)
சேர்த்தது : Deepthi
பார்வை : 112

மேலே