யார் மிருகம்

யார் மிருகம்?!:

கார் காலத் தவளை ஒன்று மழையின் வருகை எனக்கு சொல்ல நினைத்து சத்தமிட்டது , நானோ மனிதன் அருகில் நிற்கும் பாம்பு குறித்து சமிக்ஞை செய்யாமல் நகர்ந்து விட்டேன் குடையைத் தேடி!!

குரல்வளை நெரியும் வேளையும் தவளையின் சத்தம் தொடர்ந்தது !?
நானோ மாமனிதனல்லவா காதின் இருபுறமும் நுழைத்து அடைத்துக்கொண்டேன் ஒலிபெருக்கிளால்!!

பாடல் மட்டும்தான் இப்போது கேட்கிறது அனேகமாய் தவளை இறந்திருக்க கூடும் என்று மீண்டுமோர் கார் காலத்தில் குடையை பிடிக்க காத்திருக்கிறேன்!!

எழுதியவர் : தினேஷ் அலங் (24-Mar-18, 11:42 am)
சேர்த்தது : Dinesh Alang
Tanglish : yaar mirukam
பார்வை : 151

மேலே