அவளும், நானும்

சிறு வயது முதல்
நாங்கள் ஒருவரை
ஒருவர் அறிவோம்
பள்ளியில் ஒன்றாக படித்தோம்
கல்லூரியிலும் -அவளை நான்
மனதில் என் காதலியாகத்தான்
நினைத்தேன் ஆனால் ஏனோ
ஒரு நாளும் மனம் திறந்து
இதை அவளிடம் நான் சொன்னதில்லை
இப்படியே என்னுள் காதல்
அவள்மேல் வளர்ந்தது

இன்று கடற்கரைச் சென்றோம்
கடலலைகளில் கால்கள்
பதிய வேண்டுமென்றாள்
அலைகளின்மேல் கொண்ட மோகம்
அவளை அலைகள் மெல்ல
கடலுக்குள் இழுக்க , ஓர் அலை
வந்து வேகமாய்த்தாக்க
'நண்பா' காப்பாற்று என்றாள்
அலைகளின் ஓசையையும்
கிழித்து வந்து என் காதில்
விழுந்தது அவள் தினக்குரல்
திரும்பி பார்க்கையிலே
அவள் ........அவள்.....அலைகளின்
பின்னே காணாமல் போக
நான் ஏதும் யோசிக்கவில்லை
கடலில் குதித்தேன் தேடினேன்
என் கைகளுக்கு கிடைக்கவில்லை அவள்
மீண்டும் பார்க்கையில் மீனவர்
ஒருவர் தம் கைகளில் அவளை
ஏந்திவந்து கடற்கரையில் விட்டு
அவள் வயிற்றில் தங்கிய நீரை
வெளியெடுக்க, மெல்ல மூச்சு
வர, கண்களைத் திறந்து , மீண்டும்
'நண்பா' என்றே அழைத்தாள்.......
இப்போது புரிந்துகொண்டேன்
அவள் என்னை அவள் மனதில்
நல்லதோர் நண்பனாய் மட்டுமே
என்னை நினைக்கிறாள் என்று

இப்போது என் மனதில்
குழப்பம் ஏதுமில்லை
நட்பே..... நலமா என்று நான் கேட்க
அவள் தலை அசைத்தாள்,
அவள் கண்களில் நீர் பெறுக
நட்பு நெகிழ்ந்தது புத்துயிர் பெற்றபின் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Mar-18, 8:29 am)
பார்வை : 79

மேலே