தேநீர்
காலையில் கடும் பனி,
உறைந்து போன விரல்கள்,
வாகனத்தில் நான்,
சாலை ஒரம் நீ,
கண்ணாடி குவளைக்குள் வலைந்தாடும்
உன்னை என் கைகளில் ஏந்தி,
இதழ் கொண்டு சுவைக்கையில்
கடும் குளிரும் காணாமல் போகுமோ??
தேநீரே...
-நரேன்.