ஓட்டப் பந்தயம்

சத்தமில்லாமல் தந்தி அடிக்கும் இதயம்
சத்தம் போட்டு மூச்சு விடும்...

மெதுவே நடக்கும் கால்களும்
கெஞ்சத் துவங்கும்...

பவுடர் பூசிய முகத்தில்
வியர்வை வழிந்தோடும்...

இன்னும் இன்னும் வேகத்தைக் கூட்ட
தென்றல் காற்றும் முகத்தில் அறைய

வாய் திறந்து மூச்சு வாங்கும்
அவஸ்தை எல்லாம்

ஒரு நொடியில் சந்தோஷமாய் மாறக்கூடும்
கடைசி நொடி ஓடி நிற்கும் போது...

எழுதியவர் : shruthi (8-Aug-11, 11:03 pm)
சேர்த்தது : shruthi
Tanglish : ottap panthayam
பார்வை : 386

மேலே