கொண்டாட பிறந்த பிறப்பே
காதலில் தொடங்கி ,
காமத்தில் நெருங்கி ,
களிப்பில் முடிந்து ,
கருவில் இணைந்த என் உயிரே .
எண்ணிலா விந்தணுவில்
முந்திவந்து
கரு முட்டை துளைத்த
முதலனுவே !.
ஆனென்ற, பெண்ணென்ற
பேதமெல்லாம் வெளியுலகில்.
அழகான சிசுவென்றே
நீ என்னவளின் கருவறையில் .
பொதிமூட்டை போலல்ல
தகப்பன் முதுகில் சுமக்க,
இது உயிர்முஉடை அல்லவே
தாயின் கருவில் சுமக்க!.
என்னவளின் உயிர்தானே
என்னுயிரும் ,
அவள் உயிருக்குள்
இன்னொரு உயிர் சுமக்கும்
உன்னதத்தை அப்பப்பா
என்னசொல்வேன் !
பத்து மாத பரிதவிப்பும் , பாதுகாப்பும்
இடுப்பெலும்பு விரிய , முதுகெலும்ம்பு வளைய
தசைகள் கிழித்து , உதிரம் தெறித்து
நீ உதித்த
உச்சவலி பிரசவத்தை
எப்படி சொல்வாள் ,.
உச்சவலி வேதனையிலும்
பரவசித்தால் உன் முதல்
அழுகை குரலை கேட்டு ,
உன் இமைத்திறந்து
அவள் முகம் பார்த்த விழிகள் கண்டு .
முன்னம் உள்சுமந்து உதிரம் கொடுத்தவள்,
பின்னம் மடிசுமந்து முலை பால் கொடுத்தாள்.
இரவு ஏது, பகல் ஏது,
உணவேது உறக்கமேது அவளுக்கு.
உனைவளர்க்க!.
நீ ஜனித்த கதை ,
பிறந்த கதை , வளர்ந்த கதை போதும் அன்பே !
உன்பிறந்தநாள் வாழ்த்து சொல்ல,
கொண்டாட பிறந்த என் பிறப்பே!,......