மன்னிப்பாயா

மலரே...
மன்னிப்பாயா.. எனை மன்னிப்பாயா..
வில்லில் இருந்து எய்தும் அம்புகள் கூட
மார்பின் சதையை மட்டுமே காயப்படுத்துகிறது...
ஆனால்,நான் எய்தும் கொடிய வார்த்தைகளால்
உன் மார்பின் சதையை மட்டுமல்லாமல்
மென்மையான, அன்பு நிறைந்த
இதயத்தைக் காயப்படுத்தி விடுகிறேன்......
மன்னிப்பாயா அன்பே எனை மன்னிப்பாயா.....

உன் மேல் நான் கொண்ட சுயநலம்
சரியா தவறா என்று புரியாமல்
பூத்து குலுங்கும் மலர்களைப் போல
என்றும் புன்னகையுடன் குலுங்கும் முகத்தைக்
காண விழையும் நானே வாடிய மலர்களாய் வாடச் செய்கிறேன்....
மன்னிப்பாயா கவிதையே எனை மன்னிப்பாயா.......

எழுதியவர் : ஏழுமலை A (4-Apr-18, 12:24 pm)
Tanglish : mannippaayaa
பார்வை : 237

மேலே