நீ நீ மட்டும் வேண்டும்

உன் முத்தங்கள் வேண்டும்
என் கன்னங்களும்
என் இதயமும் இதமாக ஈரமாக வேண்டும்

உன் அருகாமை வேண்டும்
என் கண்களும்
என் தேகமும் சுகமாய் சிலிர்த்திட வேண்டும்


உன் பார்வை வேண்டும்
என் அணுக்கள்
எல்லாம் ஒருநொடியில் பூத்திட வேண்டும்


உன் காதல் வேண்டும்
என் காயங்களும்
என் காலங்களும் இனிதாய் மாறிட

உன் தோள்கள் வேண்டும்
இவ்வுலகம் மறந்து
என் உலகம் நீயாய் மாறிட

உன் தொடுதல் வேண்டும்
என் தனிமை
என் தவங்கள் விடுமுறை பெற்றிட

உன் கரங்கள் வேண்டும்
என் வெட்கம் தொலைத்து
நான் கோர்த்து காலமெல்லாம் நடந்திட வேண்டும்


உன் மார்பூச்சூடு வேண்டும்
உன் குழந்தையென மாறி
நான் அதற்குள் துயில்கொள்ள வேண்டும்

உன் அன்பு வேண்டும்
என் கோடிட்ட
இடங்களை எல்லாம் நிரப்பி நிறைவுசெய்திட வேண்டும்


நீ நீ மட்டும் வேண்டும்
நடிப்பை நிறுத்தி
நான் நானாக நிஜமாய் வாழ்ந்திட

நீ நீ மட்டும் வேண்டும்
நான் உனக்குள்ளாக
நீ எனக்குள்ளாக கரைந்திட வேண்டும்

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (4-Apr-18, 8:37 pm)
பார்வை : 451

மேலே