இரத்தம் குடிக்கும் அரக்கன்

சாதி சாதி என்றே நீவீர் சாதித்தது என்ன?
மதியிழந்த மனிதர்களால் வெறி கொண்ட உங்கள் தலைமீது ஆணி அடிக்க வருகின்றேன்.

காதலைக் கொல்லும் செம்மறி ஆடுகளே!
உங்களைப் பலியிட வருகிறேன்.

உண்மையின் பக்கம் நானுள்ளேன்.
நாசம் செய்வதே உங்கள் பணி என்றால் உங்களை நாசம் செய்யவே நான் பிறந்திருக்கிறேன்.

ஆண்டவன் அவதாரம் அல்ல.
அரக்கன் நான்.
கொடூரமான அரக்கன் நான்.
உயிர்களைக் கொன்று சிரிக்கும் அரக்கன் நான்.
அன்பிடம் அடிபணிவேன்.
அன்பிற்காக எதையும் செய்வேன்.

மனித உருவில் இருக்கின்றேன் மகா கோர அரக்கன் நான்.
நம்பியவரைக் காப்பேன்.
வம்பு வந்தவரின் வாயை உடைப்பேன்.

அரக்கன் நான்.
இரத்தம் வேண்டும்.
இரத்தம் வேண்டும்,
தாகம் தீர எனக்கு இரத்தம் வேண்டும்.

கோயில்களின் முன்னே அப்பாவி ஆடுகளைப் பலியிடுவது போல்
என் முன்னே அடங்கா சாதி, மத வெறிப்பிடித்தவர்களைப் பலியிடுங்கள்.
சீக்கிரம்! சீக்கிரம்!
இழுத்து வாருங்கள்.

ம்ம். ஆரம்பமாகட்டும் பலிகள்...

கலியுகம் என்றார்.
இப்படிதான் இருக்குமென்றார்.
அவரையும் கொண்டுவாருங்கள்.
சமைத்து உண்போம்.

கலியுகத்தின் முடிவைக் காலம் காணட்டும்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (5-Apr-18, 9:51 am)
பார்வை : 864

மேலே