அம்மா

தன் உயிர் கொடுத்து வளர்த்த எங்கள் தாய் இவ்வுலகை விட்டு
பூமித்தாயின் மடியில் உறங்க சென்ற நாள் இந்நாள்
உறக்கம் களைந்து உன்னடியை தேடுகிறோம் உன் ஆசிபெறுவதற்கு -எங்களின்
கண்ணீர் கூறியது எங்களுள் நீ உறைந்து ஆண்டுகள் பத்து ஆயிற்றென்று .
நாங்கள் துன்பப்படும் பொழுதெல்லாம் துவண்டுவிடாமல் தோள் கொடுத்தவள்
எங்களின் நம்பிக்கையே உந்தன் அறிவுரைகள்
பாசத்தை பகிர்வதால் பரவசம் அடையலாம் என வாழ்ந்து காட்டியவள்
வாழும்வரை வாழ்க்கையல்ல மற்றவர் மனதில் வாழும்
வரை வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருப்பவளே!
எங்கள் உள்ளத்தில் உறைந்து விட்ட உன்னை நாங்கள் எண்ணும்போது
எங்கள் உதடுகள் துடிக்கின்றன தாயே அம்மா,அம்மா ...............என்று
என்றயென்றும் உன் வழியில் நாங்கள்

எழுதியவர் : மங்களம் நீரஜா சத்தியநாரா (12-Apr-18, 2:45 am)
சேர்த்தது : MURUGAN
Tanglish : amma
பார்வை : 333

மேலே