MURUGAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  MURUGAN
இடம்:  BOISSy - SAINT - LEGER
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Dec-2017
பார்த்தவர்கள்:  341
புள்ளி:  19

என் படைப்புகள்
MURUGAN செய்திகள்
MURUGAN - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2020 9:03 pm

மங்கையாக பூப்பெய்திய புதுமலரே….
உனது கனவுகளை நிறைவேற்றிட ..….
மடந்தைபருவத்தில் கல்வியெனும் உரமிட்டிட..
மெய்யெனும் கரம் கொண்டு உழைத்திடு பெண்ணே ….
அரிவைக்காலத்தில் பாரதி கண்ட புதுமை பெண்ணாய்…
புயலென புறப்படு பெண்ணே……..
தெரிவைப்பருவத்தில் தேசமே கொண்டாடிடும் …..
பாடிடும் உன் புகழை மகளே……
பேரிளம் பெண்ணாய் அகிலமே ….
போற்றிட…..புகழ் பெற்றிட….
பெருமை சேர்த்த்திடு உனது பெற்றோர்க்கு ..

மேலும்

MURUGAN - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2020 8:39 pm

பல தடைகளை கடந்து …..
கல்வியெனும் அடித்தளமிட்டு …..
அன்பெனும் கல் கொண்டு……
வசதியாக வடிவமைத்திட்ட இல்லத்தில்……
ஆனந்தமாய் பெற்றோர் வாழ்த்திட …..
ஊர் எல்லாம் போற்றிட ….
ஏற்றம் பல கண்டிட …..
சகல ஐஸ்வரியமும் பொங்கிட ……
ஒளிமயமான வெற்றிகளை குவித்திட…..
முத்தமிழ் போல் நிறைவாக புதுமனையில் …..
வாழ்க……..வளர்க…….

மேலும்

MURUGAN - இராபூவரசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Nov-2019 1:04 pm

மனதில் ஒருவரால் குழப்பம் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் என்ன? ( அனால் அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர்)

மேலும்

என்ன காரணம் என சுய முயற்சி செய்தால் குழப்பம் நீங்கி விடும். 17-Jan-2020 12:52 am
அதுதான் உண்மையான நட்பு 18-Nov-2019 7:16 pm
அக்கறையின்கண் ஏற்பட்ட சந்தேகம் 15-Nov-2019 11:25 am
உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை அவர் செய்திருக்க கூடும், அதனால் கூட குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம். அவர் உங்களுக்கு நெருங்கிய நண்பரெனில், அவர் உங்களுக்கு செய்த நல்ல விஷயங்களை நினைவு கூறுங்கள். குழப்பம் தெளிந்து விடும். 06-Nov-2019 4:31 pm
MURUGAN - மெய்யன் நடராஜ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2020 1:33 am

முக்காலி,நாற்காலி என்பதுபோல் ஆறுகால் கொண்டதை அறுகாலி என்றும் எட்டுகால் கொண்டதை எண்காலி என்றும் அழைப்பதில் என்ன தவறு?

மேலும்

ஆறுகால், எட்டுக்கால் கொண்ட பெஞ்சுகள் இருக்கின்றனவே 20-Jan-2020 1:37 am
சொல்லலாம் தவறில்லை. சொன்னால் புரிகிறது. புரிந்துகொள்ள தானே தேவை மொழி. ஆனால், அந்த பொருள் இருக்கிறதா? 19-Jan-2020 10:55 am
ஆஹா இலக்கிய நயமும் அரசியல் நையாண்டியும் தத்துவார்த்துமுமென ஒரு நல்ல விளக்கம் .. மிக்க நன்றி 19-Jan-2020 2:11 am
ஏன் சொல்லக் கூடாது ? ஆறு கால் உள்ள வண்டை ஆறுகாலி என்று சொல்லலாம் பாதாரவிந்தத்தின் மகரந்ததத்தில் புகுந்துரையும் ஷட் சரணதாம் வண்டாக எனது ஆன்மா ஆகட்டும் என்று சங்கரர் சௌந்தர்யா லஹரி துதியில் சொல்வார் . இதை ஆறுகால் வண்டாக அல்லது ஆறுகாலி வண்டாக என்று தமிழில் சொல்லலாம் . எட்டுக்கால் பூச்சி நமது வீட்டுச் சுவரில் இங்குமங்கும் ஓடி ஒட்டடையில் ஊஞ்சலாடும் . ஓடுகாலி எட்டுக்காலியே ஒட்டடைக் குச்சியால் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று பயமுறுத்தலாம் . வீட்டுக்குத் தெரியாமல் ஓடிவிடும் பெண்களை ஓடுகாலி என்பார்கள். ஒவ்வொரு கட்சியாக மாறும் அரசியல் வாதிகளை அரசியல் ஓடுகாலி என்று சொல்லாம் . வங்கிக்கு நாட்டுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வெளிநாட்டிற்கு ஓடிவிடுபவர்களையும் ஓடுகாலிகள் என்று சொல்லலாம் . இவர்களை ஆங்கிலத்தில் FUGITIVES என்று சொல்வார்கள் . அவன் ஒரு காலிப் பயல் என்று சொன்னால் பொருளே வேறு . எட்டுக்கு காலிக்கு ஒரு தத்துவார்த்தமான விளக்கம் : மனிதர் போய்விட்டார் . காலில்லா கட்டிலில் கிடத்துகிறார்கள் எட்டு மனிதக் கால்கள் பெறுகிறது கட்டில் . புறப்படுகிறது இறுதிப் பயணம். அந்த EIGHT LEGGED BENCH ஐ எண்கால் கட்டிலை எட்டுக்காலி என்று சொல்லலாமா ? முக்காலி நாற்காலி அறுகாலி வண்டு எண்காலி எட்டுக்கால்பூச்சி எண்கால் பாடை ஓடுகாலிகளோ சமூக அரசியலில் குறைவோ காலிகள் எத்தனை காலிகளடி இங்கே காளிநீ ஒருத்தி தானடி தாயே ! 18-Jan-2020 9:37 am
MURUGAN - Maathangi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2020 10:14 am

என் புது கவிதைகளை இங்கே பதிவு செய்வது எப்படி

மேலும்

மேலே உள்ள எழுது என்பதை தேர்வு செய்து , அதில் தங்களின் பதிவுகளை பதிவிடுங்கள் . 17-Jan-2020 12:37 am
MURUGAN - ram அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2019 10:28 pm

Kondadu pirithu ezhudhuga

மேலும்

கொண்டது - கொண்டு + அது 30-Jan-2019 5:31 pm
MURUGAN - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2018 2:53 am

அன்பெனும் ஒளியினை ஏந்தி இம்மண்ணில் உதித்தவர்!
வானத்தைப்போல் பரந்த மனமும், பாசமும் நிறைந்தவர்
அழகாய் அறிவுரை போதிப்பார் !
பண்பாய் பாடம் கற்பிப்பார் !
எங்களது ஆசைகளை நிறைவேற்ற தனது
ஆசைகளை தொலைத்தவர்!
அழகாய் அவர் வாழ்ந்து காட்டுகிற வாழ்க்கை
எங்களுக்கு விலை மதிக்க முடியாத பரிசுப்பொருட்கள் !
அப்பேற்பட்ட மகானை "தந்தை" "தகப்பனார்" "ஐயன் "
"அப்பா" "தாயுமானவர்" "பிதா" இவை எல்லாவற்றையும் சேர்த்து
ஒரு வார்த்தை கிடைக்குமானால் அதுவே "பொருந்தும்" எங்களத

மேலும்

மிக்க நன்றி நண்பரே …... 24-Jul-2018 2:07 am
தந்தையின் அன்பு எப்போதும் அவரது மெளனங்கள் நிறைந்த செயல்களால் தான் நிரூபிக்கப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jul-2018 7:06 pm
MURUGAN - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2018 3:19 am

பெரு நிறுவனங்களின் கூடாரமாகிற இத்தருணத்தில்....
அலையடித்து கொண்டிருக்கும் கணனி காலத்தில் ......
அந்நிய தேசத்திற்காக கண்விழித்து,காசு பார்க்கும் சூழ்நிலையில் ....
போராடி வாங்கிய 8 மணிநேரத்தை மறந்த நேரத்தில் .....
உள்ளத்தில் உறுதிகொண்டு ஒற்றுமையுடன் .........
உழைத்திடும் உழைப்பாளர்களுக்கு வாழ்த்துகள் ..................

மேலும்

MURUGAN - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Sep-2017 12:33 pm

எண்ணம் காணொளி போட்டி

தோழர்களுக்கு வணக்கம்!
எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017


தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.

விதிமுறைகள்:
  • சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
  • காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். கவிதை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இல்லை. தாங்கள் எடுத்த குறும்படம். நண்பர்களுடன் மகிழ்ந்த காட்சிகள், செல்ல பிராணிகளின் சேட்டை என்று எதையும் தாங்கள் சமர்ப்பிக்கலாம் .
  • ஒரு நிமிட காணொளி மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும்.
  • சிறந்த காணொளி ஒன்றிற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும்.

காணொளி சமர்ப்பிக்க:
  • எழுத்து எண்ணத்தில் உங்களது காணொளியை சமர்ப்பிக்க நீங்கள் உங்களது youtube பக்கத்திற்கு சென்று share பட்டன் கிளிக் செய்யவும்.
  • பிறகு Embed என்பதை கிளிக் செய்து. உங்கள் காணொளி கோடை காபி செய்யவும்.
  • அதன் பின், எண்ணம் பகுதிக்கு வந்து video icon கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் காபி செய்த கோடை paste செய்யவும்.
  • Add வீடியோ என்பதை கிளிக் செய்தால் உங்கள் காணொளி எண்ணத்தில் சேர்ந்துவிடும்.
  • உங்களது கானொலிக்கேற்ப தலைப்பு கொடுத்து எண்ணத்தை அனைவரும் பார்க்கும் படி பதிவு செய்யவும்.

இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

நிச்சயம் நீட்டிக்கப்படும் 21-Sep-2017 3:42 pm
போட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே! இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 am
மன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 am
மாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக் கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am
MURUGAN - MURUGAN அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Dec-2017 10:40 pm

பனித்துளி வெண் பூக்களாய் பொழிய
குயில்களின் குதூகல இன்னிசை ஒலிக்க
தோகை விரித்தாடும் மயில்களின் மனதோடு
மனம் சில்லென்று சிறகடிக்க
உறவோடும்,நட்போடும் புதிய ஆண்டினை
உலகில் அன்பெனும் ஒளி வீசவேண்டுமென
இறைவனை இறைந்து பொலிவுடன் வரவேற்போம் .

மேலும்

MURUGAN - MURUGAN அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Dec-2017 9:34 pm

நடராஜர் துதி
ஆனந்தம்,ஆனந்தம் நடராஜா
ஆனந்த தாண்டவம் ஆடிடும் மூர்த்தியே நடராஜா
ஆனந்தம்,ஆனந்தம் நடராஜா
ஆனந்த தாண்டவம் ஆடிடும் மூர்த்தியே நடராஜா

ஆகாய வடிவே நடராஜா
அம்பல அரசனே நடராஜா
அகிலம் காத்திடும் அப்பனே நடராஜா
அருட்பெரும் ஜோதியே நடராஜா
அன்புடன் உன்னடி வந்தோம்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே