வெளிநாட்டு வாழ்கை

கனவுகளை சுமந்து

கடல் மேல் பறந்து

பாலைவனம் அடைந்தோன்


உறவுகளை இழந்து

உணர்வுகளை சிதைத்து

தினம் தினம் தவித்தோன்


என்னை தாலாட்டி வளர்த்த தாயும் அங்கே

அவள் அன்புக்கு எங்கும் சிறு இதயமும் இங்கே

உறவுகளின் நினைவுகள் கண்ணில் நீராய்

உழைப்பின் கஷ்டம் வேர்வை துளியாய்


தனிமையில் வாடும் என் நெஞ்சின் ஓரம்

நண்பர்கள் குரல் வந்து மோதும் நேரம்

என் நெஞ்சம் உடைந்து போகுதடா நண்பா

நம் நட்பின் அர்த்தம் இன்று உணர்ந்தேனடா


தாய் நாட்டின் உரிமம்,தெரிந்ததும் இங்கு

தாய் மொழியின் பற்று புரிந்ததும் இங்கு

உழைப்பால் உயர்வேன் அயல் நாட்டில்

என் கனவுகள் நிஜமாகும் நம் தாய்நாட்டில் ..

எழுதியவர் : வினோ (15-Apr-18, 1:05 pm)
சேர்த்தது : வினோ
Tanglish : velinaattu vaazhkai
பார்வை : 334

மேலே