ஒரு உவமையில் சொல்லிவிட முடியுமா
ஒரு உவமையில் உன்னைச் சொன்னால்
நீ ஒரு கவிதை
ஒரு கவிதையில் உன்னைச் சொன்னால்
நீ ஒரு பதுமை
நீ ஒரு பதுமை என்று சொன்னால்
நீ அசைகிறாய் நடக்கிறாய்
இதழ்களால் மெல்லச் சிரிக்கிறாய்
விழிகளால் பார்க்கிறாய்
இமைகளை மூடித் திறக்கிறாய்
இவையனைத்தையும் ஒரு உவமையில் சொல்லிவிட முடியுமா ?