விவசாயி
![](https://eluthu.com/images/loading.gif)
மூனு போகம் விளைஞ்ச பூமி
தரிசா தான் கிடக்குது!..
மூனு வேல உண்ட வயிறு
காஞ்சு தான் கிடக்குது!..
சோறு போட்ட நிலத்த விற்க
என் மனசு கேட்கலியே!..
பெத்த பிள்ளை பட்ணி கிடக்கு
சோறு போட வழி இல்லையே!..
என் வயிறு முக்கியமுனா
எப்படியோ பிழைச்சிறுப்பனே!..
ஊர் வயிறும் நெனச்சதால
என் பிள்ளை இளைச்சானே!..
ஆத்து தண்ணிய தடுத்து வச்சான்னு
போர் தண்ணிய பாய்ச்சினோமே!..
போர் தண்ணியும் தீர்ந்துடுச்சே!..
மும்மாரி பேஞ்ச மழை,
ஏனோ இப்பனு பொய்த்திருச்சே!..
கம்ப்யூட்டர் வேலையினா
யாரு வேணுனா படிச்சு பார்ப்பான்!..
விவசாயி வேலைய தான்
யாரு இங்க துணிஞ்சு பார்ப்பான்!..
விவசாயியா பிறந்ததால,
வாழ இப்ப வழியும் இல்லையே!..
விவசாயி இறந்தானா
கேட்க ஒரு நாதியும் இல்லையே!!
-தமிழன் சதிஸ்