உனை நினைத்து

உனை நினைத்தேன்-
கவிதை அருவியாக கொட்டியது●
உனைச் சந்தித்தேன்-
பேச வார்த்தை கூட வரவில்லை●
உனை நினைத்தேன்-
சிறகின்றி வான் பறந்தேன்●
உனைச் சந்தித்தேன்-
என் கால்கள் ஒரு அடி கூட நகரவில்லை●
உனை நினைத்தேன்
வீரமாய் நெஞ்சு நிமிர்ந்து நடந்தேன்,
உனை சந்தித்தேன்
கோழையாய் குறுகி
குழைந்தேன்●
உனை நினைத்தேன்-
ஆனந்த நடனம் புரிந்தேன்●
உனை சந்தித்தேன்-
உன் பார்வைபட்டதும்
கை கால்கள் நடுக்கத்தில் ஆட்டம் கண்டது●
உனை நினைப்பதே பேரின்பம்-
உனை சந்தித்து காதல்
சொல்லும் தைரியம் வரவில்லை●

எழுதியவர் : பாலமுருகன் பாபு (22-Apr-18, 9:57 pm)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : unaai ninaiththu
பார்வை : 911

மேலே